கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் புதிய கட்டுப்பாடுகளை வருகிற 24-ம் தேதி வரை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி, அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை (Elderly care) போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ - ரிஜிஸ்டர் எனும் இபதிவுமுறை (e-Registration) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த இ-பதிவு நடைமுறை வருகிற 17ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் இ - ரிஜிஸ்டர் கேட்டு பொது மக்கள் விண்னப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ - ரிஜிஸ்டர் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ - ரிஜிஸ்டர் விண்ணப்பிப்பது எப்படி ?
https://eregister.tnega.org/#/user/pass என்ற லிங்கில் உள்நுழைந்து மொபைல் எண்ணை பதிவு செய்து கேப்சாவை type செய்து submit கொடுங்கள்
அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை பதிவிட்டு கேப் சாவை உள்ளிட வேண்டும்
அடுத்து வரும் விண்ணப்பத்தில் நீங்கள் பயணிக்கும் தேர்வை கிளிக் செய்துகொள்ளுங்கள்
வெளிநாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு வரும் அனைவருக்கும் இ - ரிஜிஸ்டர் பெற வேண்டும்
அடுத்து தங்களது பெயர், முகவரி ( வீடு மற்றும் செல்லுமிடம்) பயண வரம்பு மாவட்டங் களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதேபோல் பயணத்தின் நேரம் எண்ணிக்கை ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும்
அடுத்து பயனர்கள் விவரம் வாகன விவரம் அடையாள அட்டை ஆகிய விவரங்களையும் பயணத்திற்கான காரணத்தையும் டைப் செய்துகொள்ளுங்கள்.
மருத்துவ அவசர நிலை என்றால் மருத்துவச் சான்று அல்லது அது சம்பந்தப்பட்ட ஆவணம் அல்லது திருமண நிகழ்வு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல இ - ரிஜிஸ்டருடன் தொடர்பான ஆவணங்களையும் எடுத்து செல்லவேண்டும்.
இ - ரிஜிஸ்டர் பெறுவதற்கு தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
விவரங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டதும் தங்கள் ஆவணங்கள் மற்றும் சமர்பிப்பு விபரங்கள் சரிபார்க்கப்படும் அவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டதும் இ - ரிஜிஸ்டர் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் சரியான தகவல்களை மட்டும் குறிப்பிடுங்கள்.
விண்ணப்பதாரர் பயணம் செய்கிறார் என்றால் விண்ணப்பதாரர் பெயரும் பயணம் செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்படவேண்டும்.
தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும் உடனடியாக குறிப்பு எண்ணுடன் SMS மற்றும் Email (மின்னஞ்சல்) அனுப்பப்படும்
இந்த அவசரகால போக்குவரத்து அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் உங்கள் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்:
1070, 1072, 1800 425 1333