கோயில் நிலத்தை வீடு கட்டி வசித்து வருபவர்களுக்கான மாற்று இடத்தினை ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்சன் புஷ்பராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிராமத்தில் அழகுராஜா பெருமாள் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வரும் 55 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்சன் புஷ்பராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், தக்கோலம் விஏஓ வினோத் சந்தர், தக்கோலம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் வீட்டு மனை பட்டா தேர்வு செய்வதற்கான இடத்தினை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்தனர்.