அரக்கோணம் அடுத்த மின்னல் பெரிய ஏரியில் மண் கடத்துவதாக ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்டிஓ சிவதாஸ், விஏஓ ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள், அதிகாரிகளை பார்த்தவுடன் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சோதனையில் அனுமதியின்றி ஜேசிபி, டிராக்டர் மூலம் மண் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்து அரக்கோணம் தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து ஜேசிபி மற்றும் டிராக்டர் உரிமையாளரை தேடி வருகின்றனர்.