சென்னை - தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஸ்வேதாவுக்கு கத்திக்குத்து


ரயில் நிலையத்தின் வாசலிலேயே கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்ரபரம் ரயில் நிலையத்திற்குச் சென்ற கல்லூரி மாணவி ஸ்வேதா என்பவரை ராமு என்ற இளைஞர் பட்டப்பகலிலேயே கத்தியால் குத்தியுள்ளார். கல்லூரி மாணவியை தாக்கியதோடு தன்னுடைய கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் ராமு. காயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் மாணவி ஸ்வேதா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். காதல் விவகாரத்தில் இளைஞர் அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்தினாரா என்பது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்வாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இதேபோல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.