ராணிப்பேட்டை சிப்காட் தனியார் பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி சிப்காட் போலீசார் விசாரணை.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த திருவள்ளுவர் நகர் 5வது தெரு பகுதியை சேர்ந்தவர் சாபீக் அகமது 34 வயதான இவர் சொந்த வேலை காரணமாக நேற்று இரவு ராணிப்பேட்டை வரை சென்று மீண்டும் சிப்காடு வீடு திரும்பும் போது சிப்காட் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் சாபீக் அகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.