அரக்கோணம் காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார், ரயில்வே ஊழியர். இவரது மனைவி ரீனா மீனா. இவர்களது மகள் ராகினி(3). கடந்த 13ம் தேதி ரீனாமீனா வீட்டின் மாடியில் துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தார். அவருடன் சென்ற ராகினி மாடியில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

அப்போது திடீரென நிலை தடுமாறி ராகினி மாடியில் இருந்து கீழே விழுந்தாள். இதில் படுகாயம் அடைந்த ராகினியை பெற்றோர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராகினி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தாள்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.