ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாடும் பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள, கொரோனா தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சில வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் ஒமைக்ரான் வகை தொற்றானது பரவி வருகின்ற சூழ்நிலையில், நோய் தடுப்பு பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் நாளை இரவு பொது இடங்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.