பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி அன்வர்தி கான் பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்ட வாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, காட்பாடி ரயில் நிலைய அதிகாரி பாபன்குமார்,நேற்று முன்தினம் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு புகார் அளித்தார்.
இதையடுத்து, காட்பாடி ரயில்வே இன்ஸ் பெக்டர் சித்ரா உத்தரவின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் காபி கலரில் சாட்சும்.ரோஸ் கலரில் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். வலது கையில் தேசியக்கொடியை பச்சையாக குத்தி இருந்தார்.
ஆனால், இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.