3 நாட்களுக்கு 'நோ' சரக்கு
தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003 ன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக் கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வரும் 15.01.2022(சனி) அன்று திருவள்ளுவர் தினம் என்பதாலும், 18.01.2022(செவ்வாய்) அன்று வள்ளலார் நினைவு தினம் முன்னிட்டும், 26.01.2022 (புதன்) குடியரசு தினம், ஆகிய 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூடிவைக்க வேண்டு மென ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி நாட்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் மதுக்கூட உரிமை தாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.