அரக்கோணம் அடுத்த உளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (37). இவரது மனைவி தனலெட்சுமி. இருவரும் நேற்று பைக்கில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தணிகைபோளூர் கண்டிகை சுடுகாடு அருகே சென்ற போது எதிரே வந்த பைக் பாபு மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட பாபு படுகாயமடைந்தார். உடன் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.