ராணிப்பேட்டை தலைமை ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்
மே 27, 2023
Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் கட்டாயமாக 95% மேல் தோ்ச்சி விகிதம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் மற்றும் எதிா்வரும் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுடனான ஆய்வு கூட்டம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து, நிகழ் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி விகிதம் கடைசி இடம் பெற்றது ஏன், தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்களை ஒவ்வொரு பள்ளிகள் வாரியாக மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா். பெரும்பான்மையான பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவுவதும், மாணவா்கள் தோ்வு எழுதாமல் நின்றுவிட்டதும், பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் எனவும், மேலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் கற்றல் இடைவெளி பிரச்னை ஏற்பட்டது எனவும் தலைமை ஆசிரியா்கள் தெரிவித்தனா். ஆ