#1 Ranipettai News Platform Follow us
Subscribe to Newsletter


மேலும் படிக்கவும்

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 30 மே 2023 | Horoscope Today: Astrological prediction for May 30 2023

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 30 மே 2023 | Horoscope Today: Astrological prediction for May 30 2023

மே 29, 2023 Raj Kumar.G
குறள் : 1126 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா நுண்ணியர்எம் காத லவர். மு.வ உரை : எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார் கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார் அவர் அவ்வளவு நுட்பமானவர். கலைஞர் உரை : காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர் சாலமன் பாப்பையா உரை : என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர். Kural 1126 Kannullin Pokaar Imaippin Parukuvaraa Nunniyarem Kaadha Lavar Explanation : My lover would not depart from mine eyes; even if I wink he would not sufer (from pain); he is so ethereal. Horoscope Today: Astrological prediction for May 30 2023 இன்றைய ராசிப்பலன் - 30.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panch
வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 29.05.2023

வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 29.05.2023

மே 29, 2023 Raj Kumar.G
1630ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் பிறந்தார். முக்கிய தினம் :- சர்வதேச அமைதி காப்போர் தினம் இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கணக்கிட முடியாதவை. அதனால் மற்றொரு உலக மகாயுத்தம் ஏற்படாமல், உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாக கொண்டே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றது. சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா.சபை பணி அமர்த்தும் வேலைத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும் இத்தினம் மே 29ஆம் தேதி 2001ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. உலக தம்பதியர் தினம் உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகளவில், பல சம்பவங்களின் அடிப்படையில் மனித உறவுகளை மேம்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது
Keerthi Suresh Traditional Photo: A Treat for the Eyes

Keerthi Suresh Traditional Photo: A Treat for the Eyes

மே 28, 2023 Raj Kumar.G
Keerthi Suresh is one of the most popular and talented actresses in South India. She has won the hearts of millions of fans with her versatile and natural performances in Tamil, Telugu and Malayalam movies. She has also won the National Film Award for Best Actress for her portrayal of legendary actress Savitri in Mahanati. Apart from her acting skills, Keerthi Suresh is also known for her stunning looks and graceful style. She often flaunts her traditional outfits and sarees on social media and events, and leaves everyone mesmerized by her beauty. Here are some of the best photos of Keerthi Suresh in traditional attire that will make you admire her even more.
தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 29 மே 2023 | Horoscope Today: Astrological prediction for May 29 2023

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 29 மே 2023 | Horoscope Today: Astrological prediction for May 29 2023

மே 28, 2023 Raj Kumar.G
குறள் : 1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். மு.வ உரை : போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே. கலைஞர் உரை : ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு சாலமன் பாப்பையா உரை : ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை. Kural 1125 Ulluvan Manyaan Marappin Marappariyen Ollamark Kannaal Kunam Explanation : If I had forgotten her who has bright battling eyes I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid). Horoscope Today: Astrological prediction for May 29 2023 இன்றைய ராசிப்பலன் - 28.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam 29-05-2023, வைகாசி 15
தொழிற்சாலை ஊழியருக்கு அரிவாள் வெட்டு

தொழிற்சாலை ஊழியருக்கு அரிவாள் வெட்டு

மே 28, 2023 Raj Kumar.G
தொழிற்சாலை ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நெடும்பரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கோபி (வயது 36). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இச்சிபுத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தினமும் வேலைக்கு தொழிற்சாலை பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக வீட்டுக்கு எதிரே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்தில் கோபி நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கோபியிடம் வழி கேட்பது போல் நடித்து, அவரிடமிருந்த செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் கோபி செல்போனை இறுக்கமாக பிடித்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கோபியின் கன்னத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். படுகாயம் அடைந்த கோபியை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். கோபியை அறிவாளால் வெட்டி சென்ற இளைஞர்கள் அரக்கோணம் பகுதி வழியாக தப்பிச்சென்றனர். இது குறித்து கனக
வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 28.05.2023

வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 28.05.2023

மே 27, 2023 Raj Kumar.G
🎵 1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.தியாகராஜன் தஞ்சாவூரில் பிறந்தார். முக்கிய தினம் :- உலக பட்டினி தினம் | World Hunger day 🍝 உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 'தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று அப்போதே பாரதியார் பாடினார். 🍝 ஆனால் உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. 🍝 மேலும் ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கமாகும். பிறந்த நாள் :- என்.டி.ராமராவ் 👤 என்.டி.ஆர். என்று அழைக்கப்படும் பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான என்.டி.ராமராவ் 1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் நன்டமுரி தாரக ராமாராவ். 👤 இவர் 1949-ல்
தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 28 மே 2023 | Horoscope Today: Astrological prediction for May 28 2023

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 28 மே 2023 | Horoscope Today: Astrological prediction for May 28 2023

மே 27, 2023 Raj Kumar.G
குறள் : 1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து. மு.வ உரை : ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள் பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள். கலைஞர் உரை : ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன் சாலமன் பாப்பையா உரை : என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள். Kural 1124 Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal Adharkannal Neengum Itaththu Explanation : My fair-jewelled one resembles the living soul (when she is in union with me) the dying soul when she leaves me. Horoscope Today: Astrological prediction for May 28, 2023 இன்றைய ராசிப்பலன் - 28.05.2023 | Indraya Na
அரக்கோணம் பகுதியில் 7 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் அவதி

அரக்கோணம் பகுதியில் 7 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் அவதி

மே 27, 2023 Raj Kumar.G
அரக்கோணம் பகுதியில் 7 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் அவதியடைந்தனர். அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அரக்கோணத்தை அடுத்த கார்பந்தாங்கல் கிராமத்தில் தினசரி மின் வெட்டு ஏற்பட்டு வந்்த நிலையில் நேற்று மாலை மின் வெட்டு ஏற்பட்டு சுமார் 7 மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் கிராமம் இருளில் மூழ்கியது.  மேலும் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் அவதிக்கு ஆளாகினர். அவ்வபோது ஏற்படும் மின் தடையை சரி செய்ய சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

மே 27, 2023 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, நாரை குளம் மேடு பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 21). இவர் வேலூரில் உள்ள தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் நோக்கி, கிருஷ்ணகிரி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ராணிப்பேட்டை காந்தி பகுதியை சேர்ந்த தனியார் தொழிற்சாலை தொழிலாளி சரவணன் (56) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ராணிப்பேட்டை பாலாறு பக்கத்தில் உள்ள தனியார் தியேட்டர் அருகே வரும்போது, 2 மோட்டார் சைக்கிள்களும், நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தீனா காயமடைந்தார். உடனடியாக அவரை வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராணிப்பேட்டை போலீசார், சரவணனின் பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை தலைமை ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை தலைமை ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்

மே 27, 2023 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் கட்டாயமாக 95% மேல் தோ்ச்சி விகிதம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் மற்றும் எதிா்வரும் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுடனான ஆய்வு கூட்டம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து, நிகழ் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி விகிதம் கடைசி இடம் பெற்றது ஏன், தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்களை ஒவ்வொரு பள்ளிகள் வாரியாக மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா். பெரும்பான்மையான பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவுவதும், மாணவா்கள் தோ்வு எழுதாமல் நின்றுவிட்டதும், பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் எனவும், மேலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் கற்றல் இடைவெளி பிரச்னை ஏற்பட்டது எனவும் தலைமை ஆசிரியா்கள் தெரிவித்தனா். ஆ