ராணிப்பேட்டையில் மிக்ஜாம் புயல் நிவாரணம்: 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன
டிசம்பர் 07, 2023
Raj Kumar G
ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த புயலால் மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகள், விவசாய பயிர்கள் சேதமடைந்தன. மேலும், பலர் படுகாயமடைந்தனர். புயல் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மிக்ஜாம் புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முதற்கட்டமாக 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிவாரண பொருட்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட வருவாய் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் (பொது) பாபு, (குற்றவியல்) விஜயகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன், நகர கழக துணைச் செயலாளர் ஏர்டெல் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர். இந்த நிவாரண பொருட்களில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், உப்பு, மளிகை