#1 Ranipettai News Platform Follow us
Subscribe to Newsletter


மேலும் படிக்கவும்

வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 29.03.2023

வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 29.03.2023

மார்ச் 28, 2023 Raj Kumar.G
👉 2004ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அயர்லாந்து, புகைப்பிடித்தலை பணியிடங்களில் தடை செய்த முதல் நாடானது. 👉 2007ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நார்வே நாட்டின் ஏபல் பரிசு, தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது. பிறந்த நாள் :- பவானி பிரசாத் மிஸ்ரா ✍ இந்தி காவிய உலகின் முக்கிய படைப்பாளியான பவானி பிரசாத் மிஸ்ரா 1913ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் டிகரியா என்ற கிராமத்தில் பிறந்தார். ✍ இவர் பள்ளிக்கல்வியை முடிக்கும் முன்பே கவிதை எழுதத் தொடங்கி விட்டார். பிரபல கவிஞர்களின் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன. அதன்பின் இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். இவர் காந்தியடிகளின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திய கோட்பாடுகளின் அடிப்படையில் கல்வி வழங்கும் வகையில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தினார். ✍ இவரது நூல்கள் மொத்தம் 22 வெளிவந்துள்ளன. சம்பூர்ண காந்தி, வாங்மய, கல்பனா உள்ளிட்ட பல இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்தியின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவராக 1940-களில் புகழ்பெற்றார். ✍ இவரது புனீ ஹுயி ரஸ்ஸி படைப்புக்காக 1972ஆம்
தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 29 மார்ச் 2023 | Horoscope Today: Astrological prediction for March 29 2023

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 29 மார்ச் 2023 | Horoscope Today: Astrological prediction for March 29 2023

மார்ச் 28, 2023 Raj Kumar.G
குறள் : 1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில். மு.வ உரை : தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும் முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. கலைஞர் உரை : கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை சாலமன் பாப்பையா உரை : நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை. Kural 1065 Thenneer Atupurkai Aayinum Thaaldhandhadhu Unnalin Oonginiya Thil Explanation : Even thin gruel is ambrosia to him who has obtained it by labor. Horoscope Today: Astrological prediction for March 29, 2023 இன்றைய ராசிப்பலன் - 29.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam 29-03-2023, பங்குனி 15, புதன்கிழமை,
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென புகை பயணிகள் அலறியடித்து ஓட்டம்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலில் திடீரென புகை பயணிகள் அலறியடித்து ஓட்டம்

மார்ச் 28, 2023 Raj Kumar.G
At Arakkonam railway station, due to Smoke suddenly the passengers screamed and ran in the train மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. ரயில் அங்கிருந்து 6 நிமிட காலதாமதத்தில் புறப்பட்டு சென்றது. சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று பகல் 2.28 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது. அங்கு வந்து நின்ற சில நொடியில் ரயில் இன்ஜினுக்கு பக்கத்தில் உள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்த எமர்ஜென்சி ஃபயர் சிலிண்டரை அந்த பெட்டியில் இருந்த பயணி ஒருவர் சிலிண்டர் மீது கை வைத்து அழுத்தியுள்ளார்.  இதில் சிலிண்டர் திறந்து கொண்டு அதிலிருந்து வெள்ளைப் புகை மொத்தம் வெளியேறியது. இதில் அந்த பெட்டி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் சக பயணிகளிடையே ரயிலில் தீப்பிடித்து விட்டதாக நினைத்து பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பிளாட்பாரத்தில் இறங்கி கீழே நின்றனர்.  இது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
காவேரிப்பாக்கம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

காவேரிப்பாக்கம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மார்ச் 28, 2023 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பொன்னப்பந்தாங்கல் காலனி பஜனை கோவில் தெருைவ சேர்ந்தவர் சரவணன் (வயது 52), சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக பெங்களூருவில் மனைவி செல்வி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார். அவ்வப்போது பொன்னப்பந்தாங்கல் பகுதிக்கு வந்து செல்வார். இந்த நிலையில் சரவணன் கடந்த 24-ந் தேதி பொன்னப்பந்தாங்கல் பகுதிக்கு வந்தார். இவருக்கு சொந்தமான நிலம் பன்னியூரில் உள்ளது. நேற்று சரவணன் நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் தென்னை மட்டைகளை சீர் செய்ய மரத்தில் ஏறினார். அப்போது கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் வாலாஜா அரசு தலைமை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.. இச்சம்பவம் குறித்து பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பொன்னை அருகே மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி

பொன்னை அருகே மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி

மார்ச் 28, 2023 Raj Kumar.G
Worker dies after tipper truck collides with motorcycle வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 28). மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலை பொன்னைக்கு சென்று விட்டு, மீண்டும் சரவணன் என்பவருடன், மோட்டார் சைக்கிளில், ராணிப்பேட்டை நோக்கி, பொன்னை சாலையில் வந்து கொண்டிருந்தார். கொண்டகுப்பம் அருகே வரும்போது, விரைவு சாலை பணியில் ஈடுபட்டிருந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணமூர்த்தி மற்றும் சரவணன் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணமூர்த்தி, ரத்தினகிரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். சரவணன் வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலை

ஆற்காடு அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலை

மார்ச் 28, 2023 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சக்கரமல்லூர் அடுத்த எசையனூர் கிராமம் இலுப்பை சாலையைச் சேர்ந்தவர் ஈஸ்வரப் பன். இவரது மகன்கள் குணசீலன் (38), கோபிநாதன் (30). இருவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள். இதில், இளைய மகன் கோபிநாதனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியைச் சேர்ந்த குமாரின் மகள் ரம்யாவுக்கும் (24) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தம்பதிக்கு குழந்தை இல்லை. மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை சந்திப்பதை கோபிநாதன் கடந்த சில மாதங்களாக தவிர்த்து வந்ததாககூறப்படுகிறது. இதனால், ரம்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ரம்யா அவரது தாயார் சரஸ்வதி, சகோதரர் கிஷோர் ஆகியோருடன் கடந்த14-ம் தேதி குணசீலன் வீட்டுக்கு வந்து, உன்னால் தான் எனது கணவர் தன்னை சந்திக்க வருவதில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கிஷோர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குணசீலனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த அவரை அருகில்இருந்தவர்கள் மீட்டு பூட்டுத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். கிசிச்சை முடிந்து மருத்துவர்களின் பரிந்துர
அம்மூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

அம்மூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மார்ச் 28, 2023 Raj Kumar.G
Farmer killed by electrocution ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே உள்ள சித்தாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 50) விவசாயி. இவர் நேற்று அம்மூர் அருகே உள்ள நிலத்தில் எந்திரம் மூலம் நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின் ஒயர் பட்டு ஞானராஜை மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் வழியிலேயே இறந்து விட்டதது தெரிய வந்தது. இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி அருகே வாந்தி, பேதியால் சிறுமி பலி

நெமிலி அருகே வாந்தி, பேதியால் சிறுமி பலி

மார்ச் 28, 2023 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 50). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.  அதில் இரண்டாவது மகள் மகள் நிகிதா லட்சுமி (7) அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் நிகிதா லட்சுமிக்கு நேற்று முன்தினம் முதல் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திடீரென வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலும் இருந்ததாக கூறப்படுகிறது.  இதனைதொடர்ந்து பரமேஸ்வர மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக நிகிதாலட்சுமியை கொண்டு சென்றனர். பின்னர் ஆட்டுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், அங்கிருந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நிகிதா லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 28.03.2023

வரலாற்று முக்கிய நிகழ்வுகள் - Today History : 28.03.2023

மார்ச் 27, 2023 Raj Kumar.G
🌟 1868ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளரும், அரசியல்வாதியுமான மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) ரஷ்யாவின் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் பிறந்தார். 🌟 1943ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி மறைந்தார். நினைவு நாள் :- வேதாத்திரி மகரிஷி  👉'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்ற தாரக மந்திரத்துடன் உடற்பயிற்சிகளை வகுத்தளித்த மகான் வேதாத்திரி மகரிஷி 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பிறந்தார். 👉18 வயதில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது அறிமுகமான ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணாராவிடம் தியானம், யோகா, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளை கற்றுத் தேர்ந்தார். 2-ம் உலகப் போரின்போது, முதலுதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். 👉மனிதகுலம் அமைதியுடன் வாழும் முறைகளை எடுத்துரைக்க 1958-ல் உலக சமுதாய சேவா சங்கத்தை தொடங்கினார். இது இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலும் இயங்கி வருகிறது. இவர் வகுத்த தியான முறைகள், கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன. 👉பல லட்சம்
தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 28 மார்ச் 2023 | Horoscope Today: Astrological prediction for March 28 2023

தமிழ் ராசிப்பலன் / திருக்குறள் - 28 மார்ச் 2023 | Horoscope Today: Astrological prediction for March 28 2023

மார்ச் 27, 2023 Raj Kumar.G
குறள் : 1064 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. மு.வ உரை : வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும். கலைஞர் உரை : வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது சாலமன் பாப்பையா உரை : ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது. Kural 1064 Itamellaam Kollaath Thakaiththe Itamillaak Kaalum Iravollaach Chaalpu Explanation : Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution. Horoscope Today: Astrological prediction for March 28, 2023 இன்றைய ராசிப்பலன் - 28.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam இன்றைய பஞ