ஜனவரி 03 முதல் 21 பொருட்கள் அடங்கிய தமிழக அரசின் பொங்கல் பரிசு 2022
Pongal Parisu Thoguppu 2022:
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 2022-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் அனைத்து குடும்பதாரர்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். வாங்க முதல்வர் அறிவித்துள்ள 21 இலவச பொங்கல் பரிசு பட்டியலை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் 2022:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த வகையில் ரேஷன் கடைகளில் வருகின்ற ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 03 முதல் பொங்கல் பரிசு பெற்று பயன்பெறலாம்.