ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி பரமேஸ்வரி(42). சிப்காட் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு விஜயகுமார்(23) என்ற மகனும், கோகிலா(21) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் பரமேஸ்வரி கடந்த 2 நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசில் பாபு புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.