ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய அலுவலகத்தில் இம்மாதம் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையங்களிலும் ஒவ்வொரு மாதமும் 3ம் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல முன்னணி தனியார் துறை நிறு வனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு. 12ம் வகுப்பும் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். எனவே, மேற்காணும் கல்வித் தகுதியும் விரும்பமும் உள்ளவர்கள் வரும் 16ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.