மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில்  பொங்கலை செய்வார்கள். அந்த பொங்கல் பொங்கி வந்ததும், மக்கள் "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். 

பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் பொங்குதல்' என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை.

பொங்கல் வைக்க நல்ல நேரம் | pongal vaikka nalla neram 2022

தை மாத பிறப்பு, வெள்ளிக் கிழமை.. முன்னோர்களை வணங்கினால் நல்லது


14.01.2022 - தை 01 - வெள்ளிக்கிழமை:

தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:


மதியம் 12.00 - 01.30 வரை

மாலை 04.30 - 06.00 வரை

15.01.2022 - தை 02 - சனிக்கிழமை:

மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம்:


காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

சிலர் கனு சனிக்கிழமை வைப்பார்கள். அதனால்


சனிக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:


காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

சிலர் கனு தை 03 அனுசரிப்பார்கள். அதனால்

ஞாயிற்றுக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:


காலை 06.00 - 07.30

காலை 10.30 - 12.00

தைப் பொங்கல் செழிப்பைக் குறிக்கிறது. மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரியபகவானை வழிபடுவார்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தை பொங்கல் மிக முக்கியமான நாள்.

கிராமப்புறங்களில் மக்கள் இந்த தை பொங்கலை திறந்த வெளியில் அல்லது தங்கள் முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். இதுதான் பாரம்பரிய முறையாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில்  பொங்கலை செய்வார்கள்.

அந்த பொங்கல் பொங்கி வந்ததும்,  மக்கள் "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்று அர்த்தமாகும்.